02 July 2013

தலை இல்லாமல் வாழ்ந்த அபூர்வ சேவல்


தலை­வெட்­டப்­பட்ட கோழிகள், சேவல்­க­ளுக்கு சிறிது நேரம் உடலில் உயிர் இருக்கும். அவை துடி­து­டித்­த­வாறு சிறி­து­தூரம் ஓடிச்­செல்­லவும் கூடும் என்­பதை பலர் அறிந்­தி­ருப்­பீர்கள். ஆனால், தலையை இழந்த சேவ­லொன்று ஒன்­றரை வரு­ட­காலம் உயிர்­வாழ்ந்­தது என்றால் நம்ப முடி­யுமா? நம்ப முடி­கி­றதோ இல்­லையோ அப்­படி ஒரு சேவல் உலகில் வாழ்ந்­தமை உண்மை வர­லா­றாக உள்­ளது. அமெ­ரிக்­காவின் கொல­ராடோ மாநி­லத்­தி­லுள்ள புரூ­டிட்டா நகரில் 1945 முதல் 1947 ஆம் ஆண்­டு­வரை வாழ்ந்தது அச்­சேவல். அதற்கு “மைக்” எனப் பெய­ரி­டப்­பட்­டி­ருந்­தது. பின்னர் “அதி­சய சேவல் மைக்” என அழைக்­கப்­பட்­டது.

தலையை இழந்­தமை
1945 செப்­டெம்பர் 10 ஆம் திகதி, புருட்­டிடா நகர விவ­சா­யி­யான லொய்ட் ஒல்சென் என்­ப­வரின் வீட்­டுக்கு அவரின் மாமியார் சென்­றி­ருந்தார். அவ­ருக்கு விருந்­த­ளிப்­ப­தற்­காக கோழி­யி­றைச்சி கொண்டு வரு­மாறு ஒல்­செனை அவரின் மனைவி கோரினார். ஐந்­தரை மாத வய­து­டைய மைக் எனும் சேவலை ஒல்சென் தெரி­வு­செய்தார்.
அச்­சே­வலை அவர் தலையின் ஓர­மாக வெட்­ட­மு­யன்­ற­போது, ஒல்­செனின் கைக்­கோ­டரி நழு­வி­யதால் சேவலின் கழுத்­துக்­கூ­டாக செல்லும் நாடி தப்­பி­யது. அதன் ஒரு காது மற்றும் மூளையின் ஒரு­ப­குதி ஆகி­யன பாதிக்­கப்­ப­டாமல் இருந்­தன. (குரு­திக்­கு­ழாயில் ஏற்­பட்ட அடைப்­பொன்றின் கார­ண­மாக அதற்கு குரு­திப்­பெ­ருக்கு ஏற்­ப­ட­வில்லை என்­பது பின்னர் கண்­ட­றி­யப்­பட்­டது.)
அதனால் அச்­சேவல் தடு­மாறி நடக்கத் தொடங்­கி­யது. அது கூவு­வ­தற்கும் முயன்­றது. ஆனால் அது முடி­ய­வில்லை. எனினும், சேவல் உயி­ரி­ழக்­கா­ததால் வியப்­ப­டைந்த ஒஸ்லென் அதனை கவ­ன­மாக பரா­ம­ரிக்கத் தீர்­மா­னித்தார். கழுத்­துப்­ப­கு­தி­யி­லுள்ள உண­வுக்­கு­ழாய்க்குள் பால் மற்றும் தண்ணீர் ஆகி­ய­வற்றை “ஐ ட்ரொப் ஸ்ரிஞ்சர்” மூலம் செலுத்­தினார். சிறி­த­ளவு அரைத்த சோளத்­தையும் அவர் கழுத்­தி­லுள்ள உண­வுக்­குழாய் வழி­யாக ஊட்­டினார். இதனால் அச்­சேவல் மேலும் வளரத் தொடங்­கி­யது. ஏனைய கோழிகள், சேவல்­க­ளுடன் வளர்க்­கப்­பட்ட அச்­சேவல் அதி­கா­லையில் கூவவும் செய்­தது. அதன் தொண்­டை­யி­லி­ருந்து சத்தம் எழுந்­தது. ஏனைய சேவல்கள் கூவும் ஒலியைப் போல் அது இருக்­க­வில்லை.
பிர­பலம்
சில மாதங்­களில் இச்­சேவல் குறித்த தக­வல்கள் அமெ­ரிக்­கா­வெங்கும் பரவத் தொடங்­கின. பெரும்­பா­லானோர் அவற்றை கட்­டுக்­க­தைகள் எனக் கூறி நம்ப மறுத்­தனர். அதை­ய­டுத்து, உண்­மையை நிரூ­பிப்­ப­தற்­காக அச்­சே­வலின் உரி­மை­யா­ள­ரான ஒஸ்லென் அதை சோல்ட்லேக் நக­ரி­லுள்ள உட்டா பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு கொண்டு சென்றார். இச்­சேவல் குறித்த தக­வல்கள் உண்­மை­யென நிரூ­பிக்­கப்­பட்ட பின்னர் இரண்டு தலை­யு­டைய கன்­றுக்­குட்டி போன்ற விநோத மிரு­கங்கள், பிரா­ணிகள் சகிதம் ஊர் ஊராக கொண்­டு­செல்­லப்­பட்­டது.
0.25 டொலர் கட்­டணம் செலுத்தி இச்­சே­வலை பார்க்க மக்கள் அனு­ம­திக்­கப்­பட்­டனர். அதன் புகழ் உச்­சத்­தி­லி­ருந்த காலத்தில் மாதாந்தம் 4,500 டொலர் வரை அது திரட்­டி­யது. தற்­போ­தைய பெறு­ம­தி­யுடன் ஒப்­பிட்டால் அது 48,000 டொலர்­க­ள் டைம், லைவ் உட்­பட புகழ்பெற்ற சஞ்­சி­கைகள், பத்­தி­ரி­கை­களில் இச்­சே­வலின் புகைப்­ப­டங்கள் வெளி­யா­கின



No comments:

Post a Comment