31 May 2013

ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால், ஒரு ஆண்டில் 22 நாட்களை சேமிக்க முடியுமாம்

smart-phones-2952013-150ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால், ஓராண்டில், 22 நாட்கள் சேமிக்கப்படுகிறது என அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வர்த்தக ஆராய்ச்சி நிறுவனமான, ஹாரிஸ் இன்டர்ஆக்டிவ், இது தொடர்பாக, 2,120 பேரிடம் ஆய்வு நடத்தியது. இதில், 97 சதவீதம் பேர் தங்களது முக்கிய பயன்பாட்டிற்கு ஸ்மார்ட் போனையை பயன்படுத்துவதாக தெரிவித்திருந்தனர். பெரும்பாலும், “இ மெயில்’ பயன்பாட்டிற்காக அதிக அளவில், “ஸ்மார்ட்’ போன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்கள், விளையாட்டுக்கள், இணையதள தகவல்கள், வானிலை நிலவரம், வரைபடங்கள், ஜி.பி.எஸ்., காலண்டர் மற்றும் கடிகாரம் போன்றவற்றுக்கு, “ஸ்மார்ட்’ போன்களே பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன.
அதிக அளவில் இ மெயில் பயன்படுத்தப்படுவதால், தங்களுக்கு ஒரு நாளில், 88 நிமிடம் சேமிக்கப்படுவதாக பலர் தெரிவித்துள்ளனர். இதில், எழுத்து வடிவில் அனுப்பப்படும் இமெயில் மூலம் மட்டும் நாள் ஒன்றுக்கு, 53 நிமிடம் சேமிக்கப்படுகிறது. பணியாற்றுபவர்களில், 25 சதவீதம் பேர் தங்களது பணி நிமித்தம், இ மெயில் அனுப்ப, “ஸ்மார்ட்’ போன்களை பயன்படுத்துகின்றனர். இவ்வாறு ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துவதால், ஆண்டு ஒன்றுக்கு, 22 நாட்கள் சேமிக்கப்படுகின்றன என்பதே, இந்த ஆய்வின் முக்கிய அம்சம்.இந்த ஆய்வை மேற்கொண்ட, கில் பவுன் நிக் கூறியதாவது:
மொபைல் போன்களில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், பணியிடம் மற்றும் சொந்த பயன்பாட்டிற்கு இவை அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், “ஸ்மார்ட் போன்’ பயன்படுத்துபவர்களில், 82 சதவீதம் பேர், அதில் இடம் பெற்றுள்ள எல்லா விதமான அம்சங்களையும் பயன்படுத்துவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Read more ...

30 May 2013

தொலைக்காட்சி பார்ப்பதால் ஆயுள் குறையும்

குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தொலைக்காட்சி பார்க்கும் ஒவ்வொரு மணி நேரமும் அவனது ஆயுட்காலத்தில் 22 நிமிடங்கள் குறைவதாக கண்டறிந்துள்ளார்கள். தொலைக்காட்சியை பார்ப்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் ஒருவார் ஒரு நாளைக்கு 6 மணி நேரம் செலவிடப்படுகிறார்களோ அவர்களது வாழ்வில் அடுத்த 5 ஆண்டுகளுக்கான வாழ்நாள் குறுகியதாக முடிவு பெறும் எனவும் கண்டறியப்பட்டுள்ளார்கள். ஆராய்ச்சியாளர்கள் ஒரு குறிப்பிட்ட மனிதர்களை அதிகமாக நேரம் டிவி பார்க்க வைத்து அவர்களின் நடத்தைகளை கண்டறிந்ததில் பெரும்பாலனவர்கள் புகைபிடிக்கவும் அல்லது சில நொருக்கு திண்பண்டங்களை சாப்பிட்டும் டி.வி. பார்த்து கொண்டடே இருந்தால் அவர்கள் அதிக எடையவர்களாக மாறி விட்டார்கள். மேலும் அவர்கள் எந்த ஒரு வேலை செய்வதற்கும் சோம்பேறிகளாக மாறிவிட்டார்கள்

மேலும் தகவல்களுக்கு கீழே ஆங்கிலத்தில் படிக்கவும்

According to paper published in the British Journal of Sports Medicine, Dr J Lennert Veerman and colleagues looked at the results of a survey of 11,247 Australians taken in 1999-2000, which asked about time spent watching TV, and also mortality figures for the country.

They constructed a model in which they compared life expectancy for adults who watch TV to those who did not, and worked out that every hour spent glued to the screen shortened life by 21.8 minutes.

For those in the top 1 per cent of the population who watch six hours of programmes a day, they “can expect to live 4.8 years less than a person who does not watch TV”.
The researchers say that watching TV is among the most common forms of sedentary behaviour, along with sitting in cars.

 
.

Read more ...

வானில் பறக்கும் அதிசய கார் கண்டுபிடிக்கப்பட்டது.

flying carதரையில் செல்லும் கார்களை போல இறக்கைகளை கொண்ட வானில் பறக்கும் "மரிஜூனுவா" என்ற காரினை அமெரிக்கவை சார்ந்த தனியார்  நிறுவனம் ஒன்று தயாரித்து வெள்ளோட்டம் செய்து பார்த்துள்ளது. 
இந்த கார் மக்களிடையே பிரபலமாக TF-எக்ஸ் என்று பெயர் வைக்கப்ட்டுள்ளது. பறக்கும் கார் ஒரு தனிப்பட்ட ஜெட் விமானம், ஹெலிகாப்டர் விமானம், போல கலந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தை ஒட்ட ரன்வே ஏதும் தேவையில்லை என்று, சாதாரணமாக 100 அடி இடைவெளி இருந்தாலே போதுமானது. தரையில் இருந்து செங்குத்தாக நிறுத்தி எடுக்கும் எளிதில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் ஒவ்வொரு பக்கத்திலும் மின் ஆற்றல் கொண்ட சுழலி கத்திகள் உள்ளது. TF-எக்ஸ் காற்றில் எடையைவிட அதிக எடை கொண்டதாக இல்லாமல் வடிவமைக்கப்பட்டுள்ளது. தன்னியக்க முறையில் இயக்கும் வகையில் சுவிட்சுகள் உள்ளது.  500 மைல் தூரத்தில் இறங்கும் ராசூட் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் 2015 இல் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது., இதன் அதிகபட்ச விலை அமெரிக்க மதிப்பில் $ 270, 000. TF-X காருக்கு சிறப்பான எதிர்காலம் இருக்குமான என பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
flying car 

flying car 

flying car 
Read more ...

28 May 2013

உலகின் வயதான மனிதர்

நியூயார்க்: 19ம் நூற்றாண்டில் பிறந்த ஆண்களில் உலகின் வயதான மனிதர் என்ற பெருமையைப் பெற்ற ஜப்பானின் ஜிரோமன் கிமுரா என்ற 116 வயது தாத்தா மட்டும் தான் தற்போது உயிருடன் உள்ளார். ஜப்பானைச் சேர்ந்தவர் ஜிரோமன் கிமுரா(116). உலகின் வயதான மனிதர் என்ற பெருமையைப் பெற்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தவர். ஜப்பானில் உள்ள அஞ்சலகம் ஒன்றில் 45 ஆண்டுகள் பணியாற்றி கடந்த 1962ம் ஆண்டு கிமுரா ஓய்வு பெற்றார். அவருக்கு 5 குழந்தைகள், 14 பேரப்பிள்ளைகள், 25 கொள்ளுப்பேரப்பிள்கள் உள்ளனர். அவரின் கொள்ளுப்பேரப்பிள்ளைகளுக்கு பிறந்த பிள்ளைகள் 13 பேர் உள்ளனர்.
19ம் நூற்றாண்டில் பிறந்த ஆண்களில் கிமுரா மட்டும் தான் உயிருடன் இருக்கிறார். அதே சமயம் அதே 19ம் நூற்றாண்டில் பிறந்த பெண்களில் 21 பேர் உயிருடன் உள்ளனர். கிமுரா தற்போது கியோடாங்கோவில் தனது 83 வயது மூத்த மருமகள் மற்றும் பேரனின் 59 வயது மனைவியுடன் வசித்து வருகிறார். அந்த இரண்டு பெண்களுமே விதவைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
 world oldest person now last living man born 19th centu  
 Kimura
Read more ...

ஒரு துளி ரத்தம் போதும்! கேன்சரைக் கண்டுபிடிக்க

bloodபுற்றுநோய் எனப்படும் கேன்சரைக் கண்டுபிடிக்க அதிக அளவு ரத்தம் எடுப்பது மற்றும் வலிமிகுந்த தசை டெஸ்ட் எடுப்பது போன்றவற்றுக்கு இனி அவசியமிருக்காது.
ஒரு துளி ரத்தம் முலம் புற்று நோயை கண்டுபிடித்து விட முடியும் என அறிவித்துள்ளனர் மருத்துவ விஞ்ஞானிகள். இதற்கான நவீன தொழில் நுட்பமும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
அமெரிக்காவின் பாஸ்டன் நகர ஆராய்ச்சியாளர்கள் உலகின் முன்னணி மருத்துவ கம்பெனி உதவியுடன் ஒரு புதிய ஆய்வை மேற்கொண்டனர்.
அதன் மூலம் மார்பகம் மற்றும் நுரையீரல் உள்ளிட்ட பலவிதமான புற்று நோய்களை கண்டறிந்துள்ளனர். தற்போது இதே முறையில் உலகின் பல நாடுகளில் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரத்த பரிசோதனைக்கு மைக்ரோசிப் பயன்படுத்தப்படுகிறது.
இந்த சிப் வழியாக ரத்தம் செலுத்தப்படுகிறது. அப்போது புற்று நோயை ஏற்படுத்தும் செல் அதில் பந்து போன்று ஒட்டிக்கொள்கின்றன. இச்சோதனை புற்று நோயாளிகளின் உடலில் வலியை ஏற்படுத்துவதில்லை என்பது தெரியவந்துள்ளது.
இந்த சோதனை முறையை உலகம் முழுக்க நடைமுறைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடக்கின்றன.
Read more ...

உங்கள் Android தொலைபேசி கவனம்

நீங்கள் Android தொலைபேசி பயன்படுத்துகிறீர்களா? அதற்கான application programeகளை, கூகுள் பிளே(google play) ஸ்டோரிலிருந்து இறக்கிக் கொள்கிறீர்களா? சற்று எச்சரிக்கையுடன் செயல்படவும். BadNews என்ற பெயரில் பல மால்வேர்(Malware) புரோகிராம்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த(Malware programme) மால்வேர் புரோகிராம், Android போன்களில் (சாம்சங் காலக்ஸி(samsung galaxy) அல்லது எல்.ஜி(LG). அல்லது எச்.டி.சி(HTC) போன்றவை) அமர்ந்து கொண்டு, திரும்ப திரும்ப குறும் தகவல்களை அனுப்பிக் கொண்டுள்ளது. இதனால், நாம் தொலைபேசி சேவை நிறுவனத்தில் கட்டி வைத்துள்ள பணம் வேகமாகத் தீர்ந்து போகிறது. இதுவரை 90 லட்சம் பேர் இந்த BadNews மால்வேர் புரோகிராமினை இறக்கம் செய்துள்ளதாகத் தெரிகிறது. 
எந்த (application)அப்ளிகேஷன் programme வழியாக இந்த மால்வேர்(malware) தொலைபேசிகுள் செல்கிறது என்பது இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த புரோகிராம்(programme), தொலைபேசி செயல்படுவதைக் கெடுப்பதில்லை. எல்லாவகையான programmeகளுடனும் இந்த (malware)மால்வேர் செல்வதாக லுக் அவுட் (lookout)என்னும் மொபைல் போன் பாதுகாப்பு குறித்துச் செயல்படும் நிறுவனம் அறிவித்துள்ளது. சமையல் குறித்த புரோகிராம்(programme) ஒன்றுடன் இந்த மால்வேர்(malware) சென்றுள்ளதை, இந்நிறுவனம் அண்மையில் கண்டறிந்துள்ளது. இன்னொரு நிறுவனம், இந்த BadNews மால்வேர் “Savage Knife” என்ற கேம் புரோகிராமுடன் அதிகம் சென்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இதுவரை இதே போல 32 புரோகிராம்களுடன் bad news மால்வேர் சென்றுள்ளதாக அறியப்பட்டுள்ளது. இதுவரை 60 லட்சம் ஸ்மார்ட் போன்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நமக்கு ஒரு நல்ல தகவல் கிடைத்துள்ளது. இதுவரை இந்த மால்வேர் புரோகிராம், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலேயே அதிகம் பரவியுள்ளதாம். எனவே, அங்குள்ள நண்பர்கள் வழியாக ஆண்ட்ராய்ட் போன்களைப் பெற்றவர்கள் சற்று விழிப்புடன் இருக்கவும். மற்றவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படவும். இங்கு வர எத்தனை நாள் எடுக்கும்? ஒரே நாளில் கூட வரலாம். கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து தேவைப்பட்டால் மட்டுமே, கவனத்துடன் புரோகிராம்களை தரவிறக்கம் செய்திடவும். அல்லது இந்த மால்வேர் புரோகிராமினைக் கட்டுப்படுத்தும் புரோகிராம் கிடைக்கும் வரை காத்திருக்கவும்.
Read more ...

5 கோடியே 54 லட்சத்திற்கு விற்பனையான 'போல்ட்' எனும் பந்தயப் புறா

5 கோடியே 54 லட்சத்திற்குபந்தயங்களில் கலந்துகொள்ளும் போலட் எனப் பெயரிடப்பட்டுள்ள மிக வேகமாகப் பறக்கும் புறா ஒன்றினை சீனாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் 5 கோடியே 54 லட்சத்திற்கு (400,000 அமெரிக்க டொலர்) வாங்கியுள்ளார்.
உலகின் வேகமான மனிதரான உசைன் போல்டினைப் போல பந்தயங்களில் மின்னல் வேகத்தில் பறக்கும் சக்தி வாயந்த புறாவிற்கு போல்ட எனப் பெயரிட்டுள்ளனர்.
தற்போது ஒரு வயதாகும் இப்புறாவே அதிக விலைக்கு விற்கப்பட்ட ஒரு பறவை என்ற சாதனையை தன்னகப்படுத்தியுள்ளது.
 இதற்கு கடந்த ஆண்டில் ஜனவரியில் ஒரு பறவை 322,000 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனையானதே சாதனையாக இருந்தது.
பெல்ஜியத்தில் இடம்பெற்ற பந்தயங்களில் கலந்துகொள்ளும் வேகமான பறவைகள் ஏலத்திலேயே இந்த போல்ட் எனும் புறாவை சீனாவைத் சேர்ந்த தொழிலதிபர் வாங்கியுள்ளார்.
இந்த ஏலத்தில் பெரும்பாலான பறவைகளை சீனா மற்றும் தாய்வான் நாட்டிலிருந்தவர்களே வாங்கியுள்ளனர். இந்தப் புறாவை வளர்த்த லியோ ஹெரிமன்ஸ் பெல்ஜியப் புறாக்களை வளர்ப்பதில் பிரபலமானவர்.
இதனால் குறித்த ஏலத்தின்போது ஹெரிமன்ஸ் தன்னிடம் இருந்த மொத்த பறவைகளையும் 50 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.ஐம்பது லட்சம் டாலர்களுக்கும் அதிகமான தொகைக்கு விற்றுள்ளார்.
Read more ...

உலகின் முலதாவது 'துணிகள்-தெளிப்பான் இனி ஆடைகளை தெளித்துக்கொள்ளலாம்.... கண்டுபிடிக்கப்பட்டது

இனி ஆடைகளை தெளித்துக்கொள்ளலாஸ்பெய்ன் நாட்டைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் ஒருவர் உலகின் முதலாவது 'துணிகள்-தெளிப்பான்' (clothes-spray) ஒன்றை உருவாக்கியுள்ளார்.
மனல் டொரஸ் என்ற ஆடை வடிவமைப்பாளரே இச்சாதனத்தை கண்டுபிடித்து பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இந்த துணிகள்-தெளிப்பானைக் கண்டுபிக்க லண்டனிலுள்ள இம்பரியல் கல்லூரியின் விஞ்ஞானிகளின் உதவியையும் பெற்றுள்ளார் மனல் டொரஸ்.



பொலிமர் கலவையினால் உருவாக்கப்பட்ட கலவையைக் கொண்டு குறித்த சாதனத்தின் மூலம் 15 நிமிடங்களில் ஒரு டீசேர்ட்டினை உருவாக்குகிறார் மனல். இந்த ஆடையை கழுவி மீண்டும் அணிந்துகொள்ளமுடியும் எனத் தெரிவிக்கிறார் மனல்.

இது குறித்து மேலும் குறிப்பிடுகையில், இதனை விட சிறந்த ஒரு துணிக்கலவையினை உருவாக்க திட்டமிட்டுள்ளேன் எனத் தெரிவித்தார்.


இவரது கண்டுபிடிப்பினை எதிர்வரும் வாரம் லண்டனில் இடம்பெறவுள்ள பெஷன் நிகழ்வொன்றில் அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


மேலும் இச்சாதனத்தை விரைவில் சந்தையில் அறிமுகம் செய்வதோடு இதற்காக ஒரு நிறுவனத்தையும் ஆரம்பிக்கவுள்ளார் மனல்.
Read more ...

22 May 2013

போன்களை 20 வினாடிகளில் சார்ஜ் செய்யும் தொழில்நுட்பம்: அமெரிக்க பெண் சாதனை

அமெரிக்காவைச் சேர்ந்த 18 வயது சிறுமி ஏஷா காரே (Eesha Khare) மொபைல் ஃபோன்களை 20 செக்கனில் ரீசார்ஜ் செய்யக் கூடிய உபகரணம் ஒன்றைக் கண்டுபிடித்து, விஞ்ஞான விருது பெற்று சாதனை படைத்துள்ளார். கலிபோர்னியாவில் உள்ள தனது வீட்டில் இருந்து கடந்த வாரம் போனிக்ஸுக்கு இன்டெல் நிறுவனத்தின்...

விஞ்ஞான பொறியியல் கண்காட்சிக்கு வருகை தந்ததுடன் தனது படைப்பையும் அதில் முன் வைத்தார். இவரது கருவியை அங்கு ஏற்றுக் கொண்டதுடன் இவரைக் கௌரவித்து இளம் விஞ்ஞானிகளுக்கான இரு விருதுகளில் ஒன்றை அவருக்கு வழங்கினர். இவரது உபகரணம் நீள்சதுர வடிவிலுள்ள ஒரு சூப்பர் மின்தேக்கி (supercpacitor) ஆகும். இதில் மிகக் குறைந்த கொள்ளளவில் அதிக சக்தியைச் சேகரிக்க முடியும்.

Read more ...

21 May 2013

புதிதாக லேப்டாப் வாங்கவிருப்பவர்களுக்கு சில டிப்ஸ்!

புதிதாக லேப்டாப் வாங்கவிருப்பவர்களுக்கு தேவையான டிப்ஸ்
Desktop Computer மட்டுமே பயன்படுத்தும் பல பேருக்கு எப்படியாவது ஒரு லேட்ப்டாப் வாங்கிவிடவேண்டும் என்று நீண்ட கால கனவு ஒன்று இருக்கத்தான் செய்யும்.


அப்படி கனவு காணும் பலருக்கு பணம் பட்ஜெட் பற்றாக்குறை பிரச்சனையால் லேப் டாப் வாங்க முடியாமல் கால நேரம் தள்ளிபோக்கொண்டிருக்கும்.


ஆனால் சிலருக்கு ஒரு லேப்டாப் வாங்கும் அளவுக்கு பணம் இருந்தும் நம்மால் ஒரு தரமான லேப்டாப்பை பார்த்து வாங்க முடியாது அப்படி வாங்க வேண்டுமென்றால் நல்ல கணினி அறிவு உள்ள ஒரு நண்பர் நம்முடன் ஒன்றாக வரவேண்டுமே அவரை நாம் எங்கு தேடி பிடிப்பது யாரை நம்புவது என்று தெரியாமல் லேப்டாப் வாங்கும் படலம் தள்ளிப்போய்க்கொண்டிருக்கும்.


இனி கவலை வேண்டாம் இந்த பதிவு உங்களுக்காகத்தான். நீங்களே தனியாக தைரியமாக சென்று ஒரு தரமான லேப்டாப்பை உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி வாங்கி வரலாம்.


லேப்டாப் வாங்க வேண்டும் என்றால் முதலில் உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரியான லேப்டாப் பிராண்ட் எதனை வாங்குவதென்று தீர்மானித்துக்கொள்ளுங்கள்.


சிறந்த பிராண்ட் லேப்டாப் வாங்கவேண்டுமென்றால் முதலில் இங்கு கொடுப்பட்டுள்ள சிறந்த பிராண்டில் எந்த பிராண்டை வாங்கவேண்டுமென்று முடிவுசெய்துகொள்ளுங்கள்.

SONY
HP
DELL
SAMSUNG
THOSHIBA
LENOVA
ACER



சரி இனி நீங்கள் வாங்கப்போகும் இந்த பிராண்ட் லேப்டாப்புகளில் எந்தெந்த விசயத்தை கவனமாக பார்க்கவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.


Laptop Configuration

Processor

Processor என்பது அனைத்து லேப்டாப் Mother Board களிலும் மிக முக்கியமாக பொருத்தக்கூடிய சதுரமான ஒரு சிப். இந்த Processor இன்றைய மார்கெட்டில் அதிக தரம் உள்ளதாக விற்பனையில் உள்ளது Intel Core i7. அடுத்ததாக Intel Core i5 அடுத்ததாக Intel Core i3 என்பதாகும்.


எனவே நீங்கள் விலை கூடுதலான ஒரு லேப்டாப்பை வாங்க வேண்டுமென்றால் முதலில் நல்ல ஒரு பிராண்டை தேர்ந்தெடுத்துக்கொண்டு இந்த Processor

Intel Core i7
Intel Core i5
Intel Core i3



என்ற வரிசையில் உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.

இந்த மூன்று வகையான Core வரிசையில் உள்ள Processor களில் ஒன்று உங்கள் பட்ஜெட்டுக்கு விலை கூடுதல் என்று நீங்கள் நினைத்தால் இவைகளை விட தரம் குறைந்த Intel Core 2 Duo அல்லது Intel Dual Core என்ற Processor ஐ நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.


இதை விட தரம் குறைவான Processor ஐ நீங்கள் தேர்ந்தெடுத்தால் அது இன்றைய நவீன டெக்னாலஜிக்கு பொருத்தமானதாக இருக்காது.


Intel® Core™ i7-640M Processor 2.80 GHz

அடுத்ததாக இங்கு மேலே காண்பதுபோல் இந்த Processor உடன் 2.80 GHz என்று குறிப்பிடு இருப்பதை போல நீங்கள் வாங்கும் லேப்டாப்பிலும் ஒரு நம்பருடன் GHz என்று குறிப்பிட்டு இருக்கும். இந்த நம்பரையும் நீங்கள் கவணமாக பார்க்கவேண்டியது மிக அவசியம். ஏனென்றால் இந்த 2.80 GHz என்பதை விட 2.00 GHz அல்லது 1.60 GHz என்பதன் Processor வேகம் மிக குறைவானது. 2.00 GHz லேப்டாப் மாடலை விட 2.80 GHz லேப்டாப் மாடலின் விலை குறைவானதாக இருக்குமேயானால் வேறு எந்த டெக்னாலஜி இதில் இல்லை என பார்க்கவேண்டியது அவசியம்.



RAM

அடுத்ததாக மிக முக்கியமான விசயம் RAM. நீங்கள் கம்ப்யூட்டரை திறந்த பிறகு ஒன்றுக்கு மேற்பட்ட புரோகிராம்களை பயன்படுத்தும்பொழுது கம்ப்யூட்டரின் வேகம் குறைந்துவிடாமல் பாதுகாப்பதில் இந்த RAM மிக முக்கிய பங்கு வகுக்கிறது.


அதனால் இன்றைய அட்வாண்ஸ் புரோகிராம்களை பயன்படுத்த நினைக்கும் நீங்கள் குறைந்தது 2 GB RAM இருக்கிறதா என பார்த்துக்கொள்ளுங்கள். (4 GB RAM இருந்தால் சிறந்தது) இதில் இன்னொரு முக்கியமான விசயம் DDR3 என்ற அட்வாண்ஸ் டெக்னாலஜி கொண்ட RAM நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் பொருத்தப்பட்டுள்ளதா என கேளுங்கள். ( பொதுவாக விலை குறைந்த லேப்டாப் வாங்கும்பொழுது அதில் DDR2 RAM மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.


HARD DISK

அடுத்தாக நீங்கள் கவனிக்கவேண்டியது இந்த ஹார்ட் டிஸ்க். பொதுவாக கம்ப்யூட்டரை பற்றிய விபரங்கள் அதிகம் அறியாதவர்கள் கம்ப்யூட்டரின் இயங்கும் வேகம் அதில் பொருத்தப்படும் ஹார்ட் டிஸ்கின் அளவை பொருத்துதான் உள்ளது என தவறாக என்னுகிறார்கள். கம்ப்யூட்டர் இயங்கும் வேகத்திற்கும் இந்த ஹார்ட் டிஸ்கின் அளவுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை.


ஆனால் இன்றைய மென்பொருள்களின் அதி வேக வளர்ச்சியின் காரணமாக நாம் ஹார்ட் டிஸ்க் அளவிலும் கொஞ்சம் கவணம் செலுத்த வேண்டி உள்ளது.



நீங்கள் கோரல்ட்ரா, போட்டோசாப் போன்ற போட்டோ டிசைனிங் மென்பொருள் மற்றும் வீடியோ டிசைன் செய்யும் மென்பொருள்களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்துபவராக இருந்தால் மற்றும் உங்களுக்கு விருப்பமான ஆடியோ வீடியோ பைல்களை உங்கள் லேப்டாப்பில் காப்பி செய்து வைத்து பயன்படுத்தும் பழக்கம் உள்ளவராக இருந்தால் உங்கள் ஹார்ட் டிஸ்கின் அளவு குறைந்தது 320 GB இருக்கவெண்டும்.


ஆடியோ வீடியோ கம்ப்யூட்டரில் காப்பி செய்ய தேவை இல்லை என்றால் 160 GB போதுமானது.

எனக்கு எந்த தேவையும் இல்லை மைக்ரோசாப் ஆபீஸ் மட்டும் தான் பயன்படுத்துவேன் அடுத்ததாக நான் இண்டெர்நெட் பயன்படுத்துவேன் அதோடு யூடுப் பயன்படுத்துவேன் என்று நீங்கள் சொல்பவராக இருந்தால் உங்களுக்கு 80 GB ஹார்ட் டிஸ்க் என்பதே மிக அதிகம்.


பொதுவாக இந்த ஹார்ட் டிஸ்குகளில் நீங்கள் பார்க்கவேண்டிய இன்னொரு விசயம் அதன் வேகம். SPEED 7200 RPM அல்லது SPEED 5400 RPM SPEED போன்றவை மிக சிறந்தது. இதனை விட நீங்கள் நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் ஹார்ட் டிஸ்க் ஸ்பீடு குறைந்ததாக இருந்தால் அங்கு இருப்பதில் எது கூடுதலாக RPM என்பதை தேர்ந்தெடுங்கள்.


DVD DRIVE

நீங்கள் மேலே குறிப்பிட்டது போன்று பிராண்டட் லேப்டாப் வாங்கும்பொழுது DVD டிரைவை பற்றி அதிக கவணம் எடுக்க தேவை இல்லை. ஏனென்றால் பிராண்டட் லேப்டாப்புகளில் அதற்கு பொருத்தமான தரமிக்க DVD டிரைவ் பொருத்தி இருப்பார்கள். இந்த டிரைவில் SuperDrive 8x(DVDR DL/DVDRW/CD-RW) என்பது போன்ற குறிப்பு இருக்கிறதா என பார்த்துக்கொள்ளுங்கள்.


GRAPHIC CARD

பொதுவாக விலை குறைந்த லேப்டாப் அல்லது டிஸ்கவுண்ட் விலைகளில் கிடைக்கும் லேப்டாப்புகளில் இந்த கிரபிக் கார்டு இணைந்திருப்பது இல்லை. கீராபிக் கார்டு இணைக்கப்பட்டுள்ளது என்று அந்த லேப்டாப் குறிப்பில் எழுதப்பட்டிருந்தால் அது மற்ற லேப்டாப்பை விட விலை கூடுதலாகவே இருக்கும்.

சரி இந்த கிராபிக் கார்டு இணைந்திருப்பதால் நமக்கு என்ன பயன் ?


நீங்கள் வீடியோ அனிமேசன் மற்றும் போட்டோசாப், கோரல்ட்ரா டிசைனிங் செய்பவராக இருந்தால் மற்றும் வீடியோ கேம் அதிகம் பயன்படுத்துபவராக இருந்தால் உங்களுடைய லேப்டாப்பில் கிராபிக் கார்டு இணைந்திருப்பது மிக அவசியமான ஒன்று. அல்லது உங்கள் லேப்டாப்பில் அதிக தெளிவுமிக்க வீடியோ (HD High Definition Video) படங்களை பார்க்கவேண்டும் மற்றும் ஸ்டீரியோ இசையுடன் தெளிவான ஆடியோ பாடல்களை கேட்கவேண்டும் என்ற ஆர்வம் கொண்டவராக நீங்கள் இருந்தால் இந்த கிராபிக் கார்டு இணைந்துள்ள லேப்டாப் நீங்கள் வாங்குவது சிறந்தது.


இந்த கிராபிக் கார்டு இணைந்த லேப்டாப்பை நீங்கள் வாங்கும்பொழுது இன்னொரு முக்கியமான விசயத்தையும் பார்க்கவேண்டியது அவசியம். அதாவது இந்த கிராபிக் கார்டு Dedicated Graphic அல்லது Integrated graphics (shared memory) என இரண்டு வகைகளில் லேப்டாப்பில் பொருத்தப்படுகிறது.


இதில் Dedicated Graphic என நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் எழுதப்பட்டிருந்தால் இதுவே சிறந்தது.


இந்த Dedicated Graphic Card உங்கள் லேப்டாப்பில் இணைக்கப்பட்டிருந்தால் நீங்கள் அதிக கெபாசிடி உள்ள ஒரு வீடியோ கேம் விளையாடும் நேரத்தில் அந்த வீடியோ கேமுக்கு தேவையான மெமரியை இந்த Dedicated Graphic Cardகொடுப்பதால் கம்ப்யூட்டர் எந்த விதத்திலும் வேகம் குறைவது இல்லை. கம்ப்யூட்டர் மெமரி அப்படியே இருக்கும். இதனால் வீடியோ கேம் இயங்குவதில் தடை எதுவும் ஏற்படாது.


ஆனால் Integrated graphics (shared memory) என்று குறிப்பிட்டுள்ள லேப்டாப் நீங்கள் வாங்கினால் இந்த வீடியோ மெமரி உங்கள் கம்ப்யூட்டரின் வேகத்தில் அதிக இடத்தை எடுத்துக்கொள்வதால் அதிக கெபாசிடி உள்ள வீடியோ கேம் விளையாடும்பொழுது கம்ப்யூட்டர் மெமரி குறைந்து கம்ப்யூட்டர் எரர் ஆக வாய்ப்பு இருக்கிறது.


அதனால் நீங்கள் 3D வீடியோ கேம் போன்ற அதிக கெபாசிடி உள்ள கிராபிக் பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் லேப்டாப்பில் Dedicated Graphic Card இணைந்துள்ளதா என பார்த்துக்கொள்ளுங்கள்.


போட்டோசாப், கோரல்ட்ரா மற்றும் சின்ன சின்ன கிராபில் சாப்ட்வேர்கள் பயன்படுத்துபவராக இருந்தால் Integrated graphics (shared memory) உள்ள லேப்டாப் வாங்கினால் போதும்.


Operating System ( OS)


விலை அதிகம் உள்ள லேப்டாப் வாங்க நினைக்கும் நீங்கள் இந்த ஆபரேடிங் சிஸ்டத்தில் கவனக்குறைவாக இருந்துவிடாதீர்கள்.  ஏனென்றால் எல்லாம் சரியாக இருந்து ஆபரேடிங் சிஸ்டம் சரி இல்லை என்றால் லேப்டாப் பயன்படுத்துவதே சிரமம் என்று ஆகிவிடும்.


இப்பொழுதெல்லாம் அட்வான்ஸ் லேப்டாப்களில் Widows 7 ஆபரேடிங்க் சிஸ்டம்தான் இன்ஸ்டால் செய்து விற்பனை செய்கிறார்கள். ஆனால் இந்த Winsows 7 ல் பல வித்தியாசம் இருக்கிறது.



Windows 7 Ultimate
Windows 7 Professional
Windows 7 Home Premium
Windows 7 Home Basic
Windows 7 Starter version



இப்படி விண்டோஸ் 7 வெரிசனில் பல வகை உண்டு.


இதில் Windows 7 Ultimate மற்றும் Windows 7 Professional இவை இரண்டும் மிகச்சிறந்தது என்றாலும் இந்த வெரிசன் இணைக்கப்பட்ட லேப்டாப்புகள் மற்றவற்றை விட விலை மிக அதிகமாக இருக்கலாம். இருப்பினும் இதற்கு அடுத்ததாக மிக சிறப்பாக செயல்படக்கூடிய Windows 7 Home Premium வெரிசனையாவது நாம் வாங்குவது மிக சிறந்தது. மேலும் இதில் 64 Bit என்ற வெரிசனை தேர்ந்தெடுங்கள். Windows 7 Home Premium 32 Bit ஐ விட Windows 7 Home Premium 64 Bit கிராபிக் மென்பொருள் பயனடுத்துவதற்கு மிக சிறந்தது.


Widows 7 Home Basic மற்றும் Windows 7 starter Version இவை இரண்டிலும் நீங்கள் எந்த வித நவீன மென்பொருளையும் ( Software) சிறப்புடன் பயன்படுத்த முடியாது.


அடுத்ததாக புதிய வகை லேப்டாப்புகளில் மைக் வெப் கேம் அனைத்தும் இணைந்தேதான் வருகிறது.இருப்பினும் இவை உள்ளனவா என பார்த்துக்கொள்ளுங்கள்.


நீங்கள் உங்கள் லேப்டாப்பை LCD அல்லது LED T.V யில் HDMI வீடியோ கேபிள் மூலம் இணைத்து பயன்படுத்த விரும்பினால் நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் HDMI Port உள்ளதா என பார்த்துக்கொள்ளுங்கள்.Memory Card Slot, Front Mic, Audio, SRS Speaker System இவை இணைந்ததா என பார்த்துக்கொள்ளுங்கள்.


இது தவிர நீங்கள் வாங்கும் லேப்டாபுக்கு இலவசமாக கிடைக்கும் மவுஸ் மற்றும் லேப்டாப் பேக் கிடைக்கிறதா என கேட்டுக்கொள்ளுங்கள்.
Read more ...

20 May 2013

புறா.. கடிதம்.. மொபைல்.. மின்னஞ்சல்... அடுத்து என்ன?

மின்னஞ்சல் (Electronic Mail (a) Email) என்பது நமது தின வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. மற்றவர்களுடன் வேகமாக தொடர்பு கொள்ள செலவில்லாத ஒரு தகவல் பரிமாற்ற சாதனமாக விளங்குகிறது.

துவக்கத்தில் மின்னஞ்சல் என்றால் அனைவருக்கும் தெரிந்தது ஹாட்மெயில் தான். முதலில் துவங்கப்பட்ட மின்னஞ்சல் சேவையும் இது தான். இந்த மின்னஞ்சல் சேவையை இந்தியரான சபீர் பாட்டியா தனது நண்பர் ஜாக் ஸ்மித்துடன் துவங்கினார் (ஜூலை 4, 1996) என்பது நமக்கு பெருமையளிக்கும் விஷயம். தகவல்களை பகிர்ந்திட எளிமையாகவும் வேகமாகவும் இருந்ததால் அனைவரிடமும் விரைவில் வரவேற்ப்பை பெற்றது. இதனுடைய வளர்ச்சியைப் பார்த்து பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனம் இதை USD 400 மில்லியனுக்கு (டிசம்பர் 1997) வாங்கிக்கொண்டது!

Read more ...

16 May 2013

வினோத பொருட்கள் -ஜப்பானியர்களால் கண்டறியப்பட்ட பொருட்கள்

1. நகங்களுக்கு வண்ணம் பூசும் சாதனம்



Read more ...

எளிய வழிமுறையில் வைபை நெட்வொர்க்கை ஹேக் செய்யலாம் Easy Way to Hack WEP/WPA/WPA2 Wi-Fi Password


Easy Way to Hack WEP/WPA/WPA2 Wi-Fi Password,wifi hacking,Easy Way to Hack WEP/WPA/WPA2 Wi-Fi Password.pdf,Easy Way to Hack WEP/WPA/WPA2 Wi-Fi Password pdf book,how to Hack WEP/WPA/WPA2 Wi-Fi PasswordIf you are living nearby someones WiFi hotspot and every time your laptop search for connection its showing up but you don't have passwords. Or you just want to steal someones WPA/WPA2 Wi-Fi hotspot key or passwords. Don't worry...


In this tutorial I’ll show How to hack a WPA/WPA2 Wi-Ficonnection through a bootable USB.


Read more ...

14 May 2013

இரண்டு தலைகள் கொண்ட அதிசய பிறவி மனிதர்கள்

The Minnesota conjoined twins- Abigail and Brittany Hensel, have struggled long and hard throughout their lives. Now, the tides have changed in their favor.

After birth of the twins, the doctors said that they could not survive long. But proving their fate wrong, the twins have completed 23 years of their lives. The gorgeous young ladies who share one body will feature in the show called ‘Abby and Brittany’. The show will depict the lives of the Hensel twins.



Read more ...

குழந்தைகளின் கற்றல் செயற்பாடுகளுக்கு உதவும் LeapReader பேனா அறிமுகம்

குழந்தைகள் இலகுவாக எழுதவும், வாசிக்கவும் உதவி புரியக்கூடியதான LeapReader எனும் இலத்திரனியல் சாதனத்தை LeapFrog நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் புத்தகங்களிலுள்ள சொற்களை தொடும்போது அவற்றினை வாசித்து ஒலியெழுப்பக்கூடியவாறு காணப்படுவதுடன் ஒரு நூலகத்தினைப் போன்று சுமார் 150 வரையான வாசிப்பு செயற்பாடுகளை தன்னகத்தே கொண்டுள்ளது.
நான்கு வயது தொடக்கம் எட்டு வயது வரையுள்ள குழந்தைகளுக்கு மிகவும் பயன்படக்கூடியது. இதன் மதிப்பு அமெரிக்க டாலர்களில் 50 மட்டுமே ஆகும். 
 கீழே இதன் செயல்பாட்டு படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
  







Read more ...

வெப் கமராவின் புதிய பயன்பாடுகள்..!

இன்டர்நெட் பயன்பாடு என்பது நாள்தோறும் அடிக்கடி நடை பெறுகின்ற நிகழ்வாக மாறிய பின், வீடியோ கான்பரன்சிங் என்பதுவும் பரவலான ஒரு பழக்கமாக உருவாகி வருகிறது.இதனால் இதற்கு அடிப் படையான வெப் கேமரா பயன்பாடும் பெருகி வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் நீங்கள் உங்கள் இல்லத்திற்கு அல்லது அலுவலகத்திற்கோ கம்ப்யூட்டர் வாங்கி இருந்தால் நிச்சயமாய் அதில் வெப் கேமரா ஒன்று இணைத்து வாங்கியிருப்பீர்கள்.
அது லேப் டாப் ஆக இருந்தால் இப்போதெல்லாம் திரையின் மேலாக சிறிய அளவில் வெப் கேமரா இணைத்தே தரப்படுகிறது. வெப் கேமராவினைச் சிறப்பாக எப்படி பயன்படுத்துவது எனப் பார்க்கலாம்.

Read more ...

11 May 2013

லேப்டாப் கவனம்

பொதுவாக லேப்டாப் கம்ப்யூட்டர் பயன்படுத்தப்படக் கூடிய வாழ்நாள், பெர்சனல் கம்ப்யூட்டரைக் காட்டிலும் சற்றுக் குறைவு என்றாலும், நாம் சற்றுக் கூடுதல் கவனம் எடுத்துக் கொண்டால், அதன் வாழ்நாளை நீட்டித்து, அதிக பட்ச பயன்களை அடையலாம். கீழே குறிப்பிட்டுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், லேப்டாப் கம்ப்யூட்டரை வேகமாக இயங்கச் செய்திடலாம்.
1. டிபிராக்: வாரம் ஒருமுறையேனும், உங்கள் லேப்டாப் கம்ப்யூட்டரை டிபிராக் செய்திடுங்கள். கம்ப்யூட்டர் உங்கள் பைல்களை, ஹார்ட் டிஸ்க்கில் பதிகையில், அவற்றைப் பல துண்டுகளாக்கி, ஆங்காங்கே பதித்து வைக்கும். டிபிராக் செய்திடுகையில், இந்த துண்டுகள் அனைத்தையும், கம்ப்யூட்டர் ஒரே இடத்தில் தொடர்ச்சியாக வைக்கிறது. இதனால், இந்த பைல்களைப் படிக்க லேப்டாப் அதிக சிரமப்படத் தேவை இல்லை. செயல்படும் நேரமும் குறையும்.

Read more ...

இரட்டை தலைகளுடன் பிறந்த எகிப்திய பெண் குழந்தை


இந்த பதிவானது முழுவதும் ஆங்கிலத்தில் உள்ளது. முடிந்த வரை  இது போன்ற பதிவுகளை தமிழில் பதிவிட முயற்சி செய்கிறேன்.The Egyptian girl was born with a birth defect called craniopagus parasiticus. This is a very rare birth glitch that occurs when the embryo splits into two parts but refuses to complete the process leaving its twin with a load of brain diseases.




We all have heard of twins, identical twins and even conjoined twins for that matter. But ever heard of a pair of twins out of which one baby just had a head and no body? Also that the under developed twin’s head blinked and smiled but wasn't capable of survival? Well, this is the case of Manar Maged. 
Manar was operated by a team of thirteen surgeons on 19 February 2005 when she was ten months old to separate her conjoined twin. The procedure being complex and ambiguous the surgery lasted thirteen long hours. The little kid, though survived the surgery and the subsequent brain operations but eventually died an year later on 25 March 2006 due to excessive brain infection, pneumonia and serious heart condition.

The tiny baby seems to have been born only to create history as hers was the only case that survived the surgery in 2005. 




Read more ...

10 May 2013

கல்வித்துறையில் நியமன ஆணை: முதல்வர் வழங்கினார்

  சென்னை, மே.10 - பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரிந்து, பணி காலத்தில் காலமான 394 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா நேற்று வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர்  ஜெயலலிதா நேற்று (9.5.2013) தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான 394 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார். மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் தெரிவு செய்யப்பட்ட 34 நபர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநியமன ஆணைகளை வழங்கினா
Read more ...

நியூசிலாந்தில் கரையொதுங்கிய மர்ம உயிரினம்!: திணறும் விஞ்ஞானிகள்

நியூசிலாந்து நாட்டின் பியுக்ஹினா கடற்கரையொன்றில் இராட்சத கடல் வாழ் உயிரினமொன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.

இதன் உடலின் பெரும் பகுதி அழுகிய நிலையில் காணப்படுகின்றது.



Read more ...

பழைய கணினியை பயனுள்ளதாக மாற்ற சில வழிகள்

நாளுக்கு நாள் புதுப்புது வடிவுகளில், திறன்களில், புத்தம்புதிய தொழில் நுட்பத்தில் கணினி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வெளிவந்த வண்ணம் உள்ளன,நாமும் சளைக்காமல் வாங்கிக் குவித்து கொண்டே….யிருக்கின்டே இருக்கின்றோம்,இதனால் நம்முடைய வீடும் அலுவலகமும் கணினிகளின் குவியலாக மாறிவருகின்றன,அதனால் கைவசம் உள்ள பழைய கணினிகளை கயலான் கடைகளில் கொடுத்தால் காசுபணம் கிடைக்குமா அல்லது குப்பையில் போடலாமா என யோசித்து கொண்டிருக்கும்போது அடடா புதியதாக 32 பிட் செயலியின் வேகத் திறனில் இந்த கணினி வந்தபோது எவ்வளவு அரும்பாடு பட்டு அதிக பணச்செலவில் வாங்கியதை இப்படி வீணாக்குவதா என்ற ஒரு எண்ணம் வந்தது. சரி என்னதான் செய்வது என்று யோசித்து பார்த்ததில் கீழ்காணும் பயனுள்ள ஒருசில வழிகளில் இந்த பழைய தனியாள் கணினிகளை உபயோகித்து கொள்ளலாமே என தெரிய வந்தது.

1. இசை/ஒளிப்பட இயக்கியாக : பழைய தனியாள் கணினியை மிகச்சிறந்த ஒளி ஒலி இயக்கியாக பயன்படுத்தி கொள்ள முடியும். இதற்காக ஒலி அட்டை (Sound card ) விண்டோ 98, winamp அல்லது அதற்கு இணையான ஒத்தியங்கும் (compatible)மென்பொருள் (இணையத்தில் இலவசமாக கிடைக்கின்றன) ஒலி பெருக்கி (speaker), MP3 அல்லது video கோப்புகள் ஆகியவை மட்டுமே தேவையாகும், winamp அல்லது VLC இயக்கியின் தற்போதைய பதிப்பை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பழைய தனியாள் கணினியில் நிறுவி கொள்க. பின்னர் MP3 அல்லது video ஆகிய வற்றின் கோப்புகளை பழைய கணினியில் நகலெடுத்து கொண்டு இயக்கி மிக அற்புதமான ஒளி ஒலிகளை கணினியில் பார்த்து, கேட்டு மகிழ்வதற்காக பயன்படுத்தி கொள்க.

Read more ...

09 May 2013

பொது அறிவு வினாக்கள் - 3

1.தண்ணீருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்ய உதவும்
மூச்சு கருவியின் பெயர் என்ன?ஸ்கியூபா. (SCUBA -Self Contained Underwater
Breathing Apparatus).
2.முதன் முதல் 1893 ம் ஆண்டு நினைவு தபால் தலையை வெளியிட்ட நாடு எது? அமெரிக்கா.
3.தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் மூன்று அடிப்படை நிறங்கள் எவை? பச்சை, நீலம், சிகப்பு.
3) பெண் கமாண்டோ படையை உருவாக்கிய முதல் மாநிலம் எது ?
தமிழ்நாடு.
4) தென்னிந்தியாவின் நுழைவுவாயில் எது ? சென்னை.
5) ஹாலிவுட் படத்திற்கு முதல் முதலில் இசை அமைத்த இந்தியர் யார் ?
வித்யா சாகர்.
6) சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்? டாக்டர் பி ஆர் அம்பேத்கார்.
7) மிக நீண்ட காலம் சுதந்திர இந்தியாவின் குடியரசு தலைவராக இருந்தவர் யார்? டாக்டர் ராஜேந்திர பிரசாத்.
Cool இந்திய புரட்சியின் தை என்று அழைக்கப்படுபவர் யார் ? மேடம் பிகாஜி காமா.
9) கிரெடிட் அட்டை வழங்கிய முதல் இந்திய வங்கி எது? சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா.
10) தபால் தலையில் முதலில் இடம்பெற்ற இந்தியர் யார் ? மகாத்மா காந்தி.
11) அகசிவப்பு கதிர்களை எது அதிகமாக ஈர்க்கும்? தண்ணீர்.
12) இந்திய தேசிய காலெண்டரின் படி புத்தாண்டு என்று தொடங்குகிறது? மார்ச் 21.
13) இதயத்தில் எதனை அறைகள் உள்ளன? 4.
14) பயணித்த தூரத்தை அறிய வாகனங்களில் பயன்படுத்தப்படும் கருவி எது? ஓடோமீட்டர்.
15) உலகின் இரண்டாவது நீளமான் கடற்கரையான மெரினாவை வடிவமைத்து பெயர் சூட்டியவர் யார்? கிரண்ட்டப்.
16) நியூட்ரான் கண்டறிந்தவர் யார்? சாட்விக்.
17) சிவப்பு எறும்பின் கொடுக்கில் அமைத்துள்ள அமிலம் எது? பார்மிக் அமிலம்.
18) மகாவீரர் பிறந்த இடம் எது? வைஷாலி.
19) உலகின் சர்க்கரைக் கிண்ணம் என அழைக்கப்படும் நாடு எது? கியூபா.
20) ரிசர்வ் பேங்க் ஒப் இந்தியா எந்த ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது? 1969 (சமீபத்தில் இது தனது பொன்விழா ஆண்டைக் கொண்டாடியது.)
21) பட்டுப் புழு உணவாக உண்பது? மல்பெரி இலை.
22) சூரியன் உதிக்கும் நாடு என எந்த நாட்டினைக் குறிப்பிடுகின்றனர்? ஜப்பான்.
23) ஹாரி பாட்டர் நாவலின் ஆசிரியர் யார்? ஜே. கே. ரௌலிங்.
24) சமூகவியல் என்ற சொல்லை தோற்றுவித்தவர் யார்? காம்டே.
25) பொக்காரோ இரும்பு எக்கு தொழிற்சாலை அமைந்துள்ள இடம் எது? ஜார்கண்ட். 
Read more ...

பொது அறிவு வினாக்கள்

பொது அறிவு


* ராக்கெட்டினை முதலில் கண்டறிந்தவர் சீனர்கள். இது 13ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டது.
* நமது உடலில் 6 லிட்டர் ரத்தம் உள்ளது. இதில் 4 1/2 லிட்டர் உடல் முழுவதும் சுற்றி வருகிறது. மீதி 1 1/2 லிட்டர் ரத்தத்தை சேமிப்பாக உடல் வைத்துள்ளது.
* செவ்வாய் கிரகத்தில் ஒருநாள் என்பது 24 1/2 மணி நேரம். கோடை நண்பகலில் கூட இங்கு 16டிகிரி c நிலை இருக்கும். குளிர்கால இரவிலோ 85டிகிரி c வந்து விடும்.
* 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே ஆமைகள் பூமியில் வாழ்ந்து வருகின்றன. இவை மெதுவாகச் செல்லக் கூடியவை. இவற்றுக்குப் பற்கள் கிடையாது. தாவர வகை உணவைச் சாப்பிடுவதில்லை.
300 ஆண்டுகளுக்கு மேல் ஆமைகள் உயிர் வாழ்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
* தென் அமேரிக்கா பறவைகளின் கண்டம் என அழைக்கப்படுகிறது.
* இந்தியாவில் மிகப் பெரிய பால் பண்ணை குஜராத் மாநிலத்தில் உள்ளது.
* இந்தியாவில் முதன்முதலில் காப்பிச் செடி சிக்மகளூர் என்ற இடத்தில் பயிரிடப்பட்டது.
* உலகிலேயே மிகப் பெரிய வெந்நீர் ஏரி நியூசிலாந்து நாட்டில் உள்ளது.
* ஆஸ்திரேலியா நாட்டிற்கு இரு தேசியகீதங்கள் உள்ளன.
* இந்தியாவையும், பாகிஸ்தானையும் பிரிக்கும் எல்லைக் கோட்டின் பெயர் ரெட்கிளிப் எனப்படுகிறது.
* தொழில்புரட்சி முதன் முதலில் நடந்த நாடு இங்கிலாந்து.
* பிரிட்டனின் தேசிய மலர் ரோஜா.
* இந்தியாவின் தேசிய விலங்கு புலி.
* சம்பா நடனத்திற்கு புகழ் பெற்ற நாடு பிரேசில்.
* சோவியத் ரஷ்ய ராணுவத்தின் பெயர் ரெட் ஆர்மி.
* சுதந்திர தேவி சிலையை அமெரிக்காவுக்கு கொடுத்த நாடு பிரான்ஸ்.
* 1905 - சுஸான்னே ஆர்டி டாட்டா என்னும் பெண்மணிதான் இந்தியாவில் முதன்முதலாக கார் ஓட்டியவர்.
* 1916 - தோண்டோ கேசவ் கார்வ் என்பவரால் பெண்களுக்கான முதல் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. முதலாண்டில் எத்தனை மாணவிகள் படித்தார்கள் தெரியுமா? 5 பேர் தான்.
Read more ...

லேப்டாப்பில் வெப்பத்தை எப்படி தடுப்பது நாம் அறிய வேண்டிய தகவல் !!!

கடந்த சில ஆண்டுகளாக, லேப்டாப் கம்ப்யூட்டர்களி ல் ஏற்படும் வெப்பம் குறித்த கவலை, இவற்றைப் பயன்படுத்து வோரிடையே அதிகரித்து வருகிறது. லேப்டாப் கம்ப்யூட்டர் பயன்பாடு அதிகரிப்பினால், இந்த கவலைக்கான காரணங்களையும், தீர்வுகளையும் பலரும் கண்டறிந்து வருகின்றனர். சில இடங்களில், லேப்டாப் கம்ப்யூட்டர்கள் கூடுதல் வெப்பத்தினால், தீ பிடித்த தகவல்களும் மக்களை அதிர்ச்சி அடையச் செய்தன. டெல், சோனி, ஏசர் போன்ற நிறுவனங்கள், தாங்கள் விற்பனை செய்த லேப்டாப் கம்ப்யூட்டர் களில் உள்ள பேட்டரிகள் அதிக வெப்பத்தைவிரைவில் அடைந்ததனால், அவற்றை வாங்கிக் கொண்டு, புதிய பேட்டரிகளைத் தந்த நிகழ்வுகளும் ஏற்பட்டன.
-
Read more ...

குறைந்த செலவில் மற்ற நாடுகளுக்கு பேச !!!


கூகுள் வாய்ஸ் 1 ரூபாயில் இந்தியாவிற்கு பேச...

இந்தியாவிற்கு பேச 1 ரூபாய்,அமெரிக்கா, கனடாவிற்கு வெறும் 50பைசா மட்டுமே.

எதையும் டவுன்லோட் செய்ய வேண்டியதில்லை.
ஜிமெயிலிலிருந்து நேரடியாக உலகின் எந்த மூலைக்கும் தொடர்பு கொள்ளலாம்.

மிக மிக தெளிவான நெட்வொர்க்.(கணினியில் WINDOWS, LINUX, MAC)
மொபைலில் ANDROID, IPHONE, IPAD, IPOD, BLACKBERRY ஆகிய மாடல்களிலும் வேலை செய்கிறது.

Read more ...